Advertisement

"135 கோடி இந்தியர்கள் சார்பாக ஹாக்கி அணிகளுக்கு வாழ்த்து" - அனுராக் தாக்கூர்

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்து வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்நிலையில், இரு அணிகளும் தங்கப் பதக்கம் வெல்ல 135 கோடி இந்தியர்கள் சார்பாக வாழ்த்துவதாகவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அரையிறுதிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் நிச்சயம் தகுதி பெறும் என உறுதிபட நம்பியதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கவுரவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறையை கவனித்து வந்த கிரண் ரிஜிஜு, கடந்த மாதம்தான் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments