Advertisement

சிஎஸ்கேவுக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடாத வார்னர் சொன்னது இது தான்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அவர் கடந்த இரு போட்டிகளாக அந்த அணியின் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத அவர் சொன்னது இது தான். 

“நமக்கு உண்மையாக இருப்பவர்கள் நம் முகத்திற்கு எதிரில் இருக்க மாட்டார்கள். நமக்கு பின்னால் துணையாக இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

இதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் அவர். மீண்டும் அணியில் இடம் பெறாத அவர் ஹோட்டலில் இருந்தபடி இதை சொல்லியுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments