Advertisement

35 வீரர்கள், 2 வெவ்வேறு அணிகள், 3 சுற்றுப் பயணங்கள் - டி20 உலகக் கோப்பைக்காக பிசிசிஐ மெகா பிளான்

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் விதத்தில், வெளிநாட்டுத் தொடர்களை அதிகப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே திட்டமிட்ட தொடர்களுடன் கூடுதலாக சில தொடர்களை நடத்தவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அதில் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால், இந்த முறை கோப்பையை வென்று ஆக வேண்டும் என தீவிரமான சில திட்டங்களை வகுத்து வருகிறது பிசிசிஐ நிர்வாகம். அதன்படி, இந்த எட்டு மாதங்களுக்குள் அதிகளவிலான டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் வகையில் சுற்றுப்பயணங்களை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் இந்திய அணி இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட உள்ளது. அதில் ஒன்று, இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி. அதுபோக இந்த மாதம் தொடங்கும் இலங்கையுடான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments