Advertisement

சஹா 'ஓய்வு' உரையாடலில் நடந்தது என்ன? - ராகுல் டிராவிட் விளக்கம்

கொல்கத்தா: 'இந்திய அணிக்காக விருத்திமான் சஹா செய்த சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு' என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வலியுறுத்தியதாக டிராவிட் மீது சஹா குற்றம்சாட்டியதை தொடர்ந்து இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் எந்த தொடர்களிலும் இந்திய அணிக்கு தான் தேர்வு செய்யப்பட போவதில்லை என்பதை தேர்வுக்குழு தெரிவித்ததாக சஹா தெரிவித்திருந்தார். மேலும், "இலங்கை தொடருக்கு நான் தேர்வாகவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. இது முன்பே எனக்கு தெரியும். இனிமேல் நான் இந்திய அணிக்காக பரிசீலிக்கப்பட மாட்டேன் என ஏற்கெனவே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. தென்னாப்பிரிக்க தொடரிலேயே என்னை தேர்வு செய்யக் கூடாது என்று தேர்வுக் கமிட்டி எடுத்த முடிவு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூலமாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments