Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்காக பிரத்யேக பிரிவை தொடங்கியது ட்விட்டர்

மும்பை: இந்திய கிரிக்கெட்டி ரசிகர்களுக்கான பிரத்யேகப் பிரிவை சமூகவலைதளமான ட்விட்டர் உருவாக்கி உள்ளது. இதற்கான முன்னோட்டத்தை ட்விட்டர் தொடங்கியுள்ளது. இதற்காக ட்விட்டர் அதன் எக்ஸ்புளோர் பக்கத்தில் ஒரு பிரத்தியேக கிரிக்கெட் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியாவில் ஆண்ட்ராய்டில் ட்விட்டரைப் பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு கிடைக்கும்.

இந்த பிரிவின் மூலம் ரசிகர்கள் பிரத்யேக வீடியோ உள்ளடக்கம், நிகழ்நேர ஆட்ட புதுப்பிப்புகளை வழங்கும் ஸ்கோர் போர்டு, ஊடாடும் விட்ஜெட்களை அணுக முடியும். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட குழு எமோஜிகளை பயன்படுத்தி ரசிகர்கள்தங்கள் அணிகளை உற்சாகப் படுத்த முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments