Advertisement

IPL 2022 | எகிறவைக்கும் எதிர்பார்ப்புகள் - ஒரு குட்டி ரீவைண்ட்

2007-ம் ஆண்டு... யாராலும் மறக்க முடியாத ஆண்டு, கிரிக்கெட் உலகின் புது அத்தியாயம் இயற்றப்பட்ட ஆண்டு. ஆம், 2007-ம் ஆண்டு, முதல் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் புது அத்தியாயமே. 8 மணி நேரம் நடைபெறும் போட்டியை கண்ட முதியவர்களுக்கு அன்று 4 மணி நேரத்தில் போட்டி முடிந்து விடுவது மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர கொடுத்திருக்கலாம்.

அவர்களின் அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், முதல் டி20 உலகக் கோப்பையும் இந்தியா வென்றது. இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் தெரியாது, இது எவ்வளவு பெரிய சந்தையை ஏற்படுத்த போகிறது என்பது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments