Advertisement

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா வேதனை

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன்கள் இலக்கை துரத்திய நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அம்பதி ராயுடு 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய போதிலும் சென்னை அணி வெற்றிக்கோட்டை எட்ட முடியாமல் போனது.

அம்பதி ராயுடு ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய நிலையில் மறு முனையில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடியது வெற்றியை வெகுவாக பாதித்தது. 12.4-வது ஓவரில் களமிறங்கிய ஜடேஜா கடைசி வரை களத்தில் நின்று 16 பந்துகளில் 21 ரன்களே சேர்த்தார். 18-வது ஓவரிலேயே சென்னை அணி வெற்றியை நழுவவிடத் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments