Advertisement

அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடம் ஒப்படைத்தார் கவாஸ்கர்

மும்பை: 33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்ட்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தார் சுனில் கவாஸ்கர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடியவர் சுனில் கவாஸ்கர். 72 வயதான அவர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். மும்பையை சேர்ந்தவர். ஓய்வுக்கு பிறகு போட்டிகளை வர்ணனை செய்வது, கிரிக்கெட் தொடர்பாக எழுதுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments