Advertisement

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றியை குவித்த நடால்

பாரீஸ்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்பெயினின் ரபேல் நடால் தனது 300-வது வெற்றியை பதிவு செய்தார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 67-ம் நிலை வீரரான பிரான்ஸின் கோரெண்டின் மவுடெட்டை எதிர்த்து விளையாடினார். இதில் ரபேல் நடால் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments