Advertisement

உலகக் கோப்பைதான் அடுத்த இலக்கு - ஐபிஎல் தொடரை வென்ற ஹர்திக் பாண்டியா உற்சாகம்

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அறிமுக தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியது குஜராத் அணி. இந்த சீசனுக்காக ஏலம் முடிந்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் குஜராத்அணியை திறம்பட வழிநடத்தி கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

இறுதிப் போட்டியில் முக்கியமான பேட்ஸ்மேன்களான ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரை ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்கச் செய்து ராஜஸ்தான் அணியை சிதைவுக்கு உட்படுத்தியிருந்தார். இதில் இருந்து அந்த அணியால் மீளமுடியாமல் போனது. இந்த தொடரின் வாயிலாக மீண்டும் முழுமையான ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments