Advertisement

IPL 2022 | ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டம் - குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் பேட்டிங் செய்தாலும், முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும். இளம் வீரர் சாய் சுதர்சன் மட்டும் 65 ரன்கள் எடுக்க அவரின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களே எடுத்தது. கசிகோ ரபாடா பஞ்சாப் அணிக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments