ஒரு கட்டத்தில் 200 ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் இந்திய அணியை தென்னாப்பிரிக்கா பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷானும் இணைந்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் பின்னர் பவுண்டரி மழை பொழிந்தார். ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 35 பந்துகளில் 57 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 31 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஸ்ரேயா ஐயர் 14 ரன்னில் நடையைக் கட்டினார். அதிரடியில் இறங்கி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் 200 ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் இந்திய அணியை தென்னாப்பிரிக்கா பவுலர்கள் கட்டுப்படுத்தினர். ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனைத்தொடர்ந்து இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகிறது. இதனைத்தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பவுமா மற்றும் ஹென்ரிக்ஸ் களமிறங்கிய நிலையில், அந்த அணி 2 ஓவர்களுக்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments