Advertisement

'தங்க மகள்' நிகத் ஐரீனுக்கு ரூ.2 கோடி வழங்கினார் தெலங்கானா முதல்வர்

ஹைதராபாத்: மகளிர் உலக குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற நிகத் ஐரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி உள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். தெலங்கானா உதய தினத்தில் இந்தக் காசோலையை நிகத் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 19-ஆம் தேதி அன்று உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரித்திர சாதனை ஒன்றை படைத்திருந்தார் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த 25 வயதான நிகத் ஜரீன். அவரது வெற்றியை பலரும் பாராட்டி இருந்தனர். அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிகத்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments