Advertisement

3-வது டி20-ல் இந்தியா வெற்றி - பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு

விசாகப்பட்டினம்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வென்ற நிலையில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் 3-வது ஆட்டம் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 57, இஷண் கிஷண் 54, ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்திய அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் 4, யுவேந்திர சாஹல் 3 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments