Advertisement

பிரெஞ்சு ஓபன் அரை இறுதியில் சிலிச் - ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரை இறுதி சுற்றுக்கு ஒற்றையர் பிரிவில் குரோஷியாவின் மரின் சிலிச், நார்வேயின் காஸ்பர் ரூட் முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி அரை இறுதியில் தோல்வியடைந்தது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 20-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலேவை எதிர்கொண்டார். சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மரின் சிலிச் 5-7, 6-3, 6-4, 3-6, 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபனில் மரின் சிலிச் அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments