Advertisement

'பார்ட்டிக்கு தடை' - கத்தார் உலகக் கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு; மீறினால் தண்டனை?!

தோஹா: கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டிகளை காண வரும் கால்பந்து ரசிகர்கள் ‘பார்ட்டி’ போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட அந்நாடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிகிறது.

வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரையில் கத்தார் நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. தொடரை நடத்த கத்தார் தேசம் தயார் நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் பல்வேறு குற்றச்சாட்டுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி உள்ளது அந்த நாடு. கட்டுமான தொழிலாளர்களை அந்த நாடு நடத்திய விதம் உலக அளவில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. உலகில் கடுமையான விதிகளை பின்பற்றி வரும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments