Advertisement

பைனலிசிமா கோப்பையை வென்றது அர்ஜென்டினா

லண்டன்: தென் அமெரிக்க, ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பைனலிசிமா கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 3-வது ஆண்டுக்கான போட்டியில் நேற்று முன்தினம் அர்ஜென்டினா - இத்தாலி மோதின.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 28-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெஸ், 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா, 94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலா ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதில் இரு கோல்களை அடிக்க உதவியிருந்த லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments