Advertisement

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய இணை வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை வெற்றிப்பெற்றது. 

ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை பிரிட்டனின் வெண்சடி, பென் லேன் இணையை எதிர்கொண்டனர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றது.

இதனிடையே பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் 2 வெற்றி 1 தோல்வியை பெற்றதால் 3-ஆம் இடத்தை பிடித்த இந்திய அணியால், காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது சோகமாக அமைந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments