Advertisement

ஒலிம்பிக்: நீச்சல் பிரிவில் அரையிறுதி வாய்ப்பை இழந்தார் இந்திய வீரர் சஜன் பிரகாஷ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 200 மீட்டர் ஆடவர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கான வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் இந்திய வீரர் சஜன் பிரகாஷ்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஆடவருக்கான பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தீய வீரர் சஜன் பிரகாஷ் கலந்துக்கொண்டார். இதில் 1 நிமிஷம் 57 வினாடிகள் நீந்திய அவர் 4 ஆம் இடத்தை பெற்றார். சஜன் பிரகாஷ் இதில் மூன்றாவது இடம் பிடித்திருந்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருப்பார். ஆனால் நூலிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டார் சஜன் பிரகாஷ். இதன் காரணமாக நீச்சல் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments