டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இடையிலான ஆடவர் ஹாக்கி அரையிறுதியில், போட்டி தொடங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தது பெல்ஜியம்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவுக்கான அரையிறுதி ஹாக்கி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் போட்டி தொடங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணிக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திய பெல்ஜியம் வீரர் லூசிபார்ட் அபாரமாக விளையாடி கோல் அடித்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் கோல் அடித்தது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஆனால் விடாமல் துரத்திய இந்தியாவுக்கு பெல்ஜியம் வீரர் செய்த தவறால் பென்லாட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதனை சிறப்பாக பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். பின்பு மீண்டும் சில நிமிடங்களிலேயே இந்தியாவுக்கு தன்னுடைய பிரமாதமான "பேக் ஷாட்" மூலம் 2 ஆவது கோலை பதிவு செய்தால் மண்தீப்சிங். இதனையடுத்து முதல் கால் ஆட்டத்தில் (முதல் 15 நிமிடங்கள்) இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments