Advertisement

பஞ்சாப்: சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக் வெற்றி வீரர்களின் பெயர்கள்

பஞ்சாப்பில் உள்ள சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக்கில் வாகைசூடிய வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியி்ன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஒலிம்பி்க்கில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர்களை கவுரவிக்கும் வகையில் அங்குள்ள சாலை, பள்ளிகளுக்கு ஒலிம்பிக்கில் வாகைசூடிய வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments