Advertisement

பந்துவீச்சில் மிரட்டிய நரைன், வெங்கடேஷ், வருண் - 127 ரன் மட்டுமே எடுத்த டெல்லி அணி

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது. 

image

டெல்லி அணிக்காக ஸ்மித் மற்றும் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 24 ரன்கள் சேர்த்து ஐந்தாவது ஓவரில் அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் ஐந்து பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து அவுட்டானார். அடுத்தடுத்த இந்த விக்கெட் இழப்பால் டெல்லி அணி நிதான ஆட்டத்தையும் தடுப்பு ஆட்டத்தையும் மேற்கொண்டது. இதனால், ரன் வேகம் மந்தமாகவே இருந்தது.

நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 39 ரன்களில் அவுட்டானார். அப்போது டெல்லி அணி 77 ரன்களை 12.2 ஓவர்களில் எடுத்திருந்தது. பின்னர் வந்த ஹெட்மயர் 4 ரன்களிலும், லலித் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். கேப்டன் ரிஷப் பன்ட் இறுதி பந்து வரை ஆடுவது என்ற உறுதியுடன் களத்தில் நின்று விளையாடினார். இருந்தும் கடைசி ஓவரில் 39 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார் அவர். அஸ்வின் 9 ரங்களிலும், ஆவேஷ் கான் 5 ரன்களிலும் வெளியேறினர். 

கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஃபெர்குயூசன், டிம் சவுதி மாதிரியான வீரர்கள் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். கொல்கத்தா அணி இருபது ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments