Advertisement

அதிரடியாக தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 149 ரன்களில் கட்டுப்படுத்தியது பெங்களூர்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி துபாய் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

image

எவின் லூயிஸ் மற்றும் யாஷஸ்வி ஜெயஸ்வால் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தனர். லூயிஸ் 58 ரன்களை சேர்த்து அவுட்டானார். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் அவுட்டானார். சாம்சன் 19 ரன்களில் அவுட்டானார். 

லோம்ரோர், லிவிங்ஸ்டன், தெவட்டியா, ரியான் பராக் என மூவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை கேரி செய்ய ராஜஸ்தான் அணி தவறிவிட்டது. மோரிஸ் 14 ரன்களில் அவுட்டானார். சேத்தன் சக்காரியாவும் கடைசி பந்தில் அவுட்டானார். 

image

பெங்களூர் அணியின் சஹால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 

இருபது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. அந்த அணி நிர்ணயித்த இலக்கை பெங்களூர் விரட்டி வருகிறது. அந்த அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்திருந்தது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments