Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடத்திய 23 பேர் கைது: ஹைதராபாத்தில் ரூ.93 லட்சம் ரொக்கம், செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து கோடிக் கணக்கில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மியாப்பூர், பூச்சுபள்ளி, கச்சிபவுலி, மைலார்தேவ் பள்ளி ஆகிய பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டம் நடத்திய 23 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் ரொக்கம், மற்றும் லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.20 கோடி ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments