Advertisement

டி20 உலகக் கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 125 ரன்கள் இலக்கு - கட்டுப்படுத்துமா வங்கதேசம்?

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 124 ரன்களை எடுத்துள்ளது. 

image

முதலில் பேட் செய்து பெரிய இலக்கை செட் செய்ய வேண்டுமென்ற வங்கதேச அணியின் நோக்கத்தை தவிடு பொடியாக்கி உள்ளனர் இங்கிலாந்து பவுலர்கள். இந்த தொடரில் டாஸ் வெல்லும் அணிகள் பவுலிங் தேர்வு செய்து வந்த நிலையில் அதை தகர்க்க நினைத்த வங்கதேச அணியின் முயற்சி வீணாகியுள்ளது. 

லிட்டன் தாஸ், முகமது நைம், ஷகிப் அல் ஹசன் என அந்த அணியின் டாப் மூன்று பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறியுள்ளனர். இடையில் முஷ்பிகூர் ரஹிம் மற்றும் கேப்டன் மஹமுதுல்லா இடையில் சின்ன பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தது. இருந்தும் அதை அவர்களால் பெரிதாக அமைக்க முடியவில்லை. இறுதியில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. 

image

மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், மில்ஸ், லிவிங்ஸ்டன் மாதிரியான வீரர்கள் இங்கிலாந்து அணி சார்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது இங்கிலாந்து. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments