Advertisement

நான் இனவெறி பிடித்தவன் இல்லை: ரசிகர்களுக்கு குயின்டன் டீ காக் உருக்கமான விளக்கம் 

இனவெறிக்கு எதிராக நான் முழங்காலிட்டு சபதம் ஏற்பது மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்தால் அது சிறந்ததுதான். ஆனால், நான் இனவெறி பிடித்தவன் இல்லை. அதுபோல் சித்திரிப்பது வேதனையாக இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் தெரிவித்தார்.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments