Advertisement

தண்ணி காட்டிய ஆப்கானிஸ்தான்! வெற்றி நடையை தொடரும் பாகிஸ்தான்! ஆசிப் அலி அசத்தல்!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. 

image

148 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பாகிஸ்தான். பாபர் ஆஸம் 51 ரன்கள், ஃபாக்கர் ஜமான் 30 ரன்கள், ஆசிப் அலி 25 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை சூப்பர் 12 சுற்றில் பதிவு செய்துள்ளது பாகிஸ்தான். இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் குரூப் 2-வில் முதலிடத்தில் நீடித்து வருகிறது பாகிஸ்தான்.  

image

இந்த போட்டியில் கடைசி 2 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கரிம் ஜனத் வீசினார். ஆறு பந்துகளில் 4 சிக்சர்கள் விளாசி வெற்றி பெற செய்தார் ஆசிப் அலி. ஆப்கானிஸ்தான் இறுதி நேர பதற்றத்தால் வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தி தோல்வியை தழுவியுள்ளது ஆப்கானிஸ்தான். பேட்டிங், பவுலிங் என வலுவான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தியது. 

இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments