Advertisement

இந்தியா vs நியூசிலாந்து : ரன் சேர்க்க தடுமாறும் இந்தியா : 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பு!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்து இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. 

15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இஷான் கிஷன், ராகுல், ரோகித், கோலி மற்றும் பண்ட் என ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

தற்போது ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா விளையாடி வருகின்றனர். இஷ் சோதி (2), போல்ட், மில்னே மற்றும் சவுதி விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments