Advertisement

சூப்பர் 12 சுற்றில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா!

நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 84 ரன்களை எடுத்தது. 

image

85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா விரட்டியது. முதல் ஓவரில் ரீசா ஹென்றிக்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து டி காக், 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 

பவர் பிளே ஓவர்கள் முடிவில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது அந்த அணி. பின்னர் கேப்டன் பவுமா உடன் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் டுசென் (Rassie van der Dussen). 22 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டானார்.  

image

13.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை எட்டியது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் மூன்றாவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. 

இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments