Advertisement

தொடர்ந்து 4-வது வெற்றி: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில், நமீபியாவை 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
 
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான். தொடக்க வீரர்கள் பாபர் அஸம், ரிஸ்வான் முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். அஸம் 70 ரன்களில் வெளியேறிய நிலையில், ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
 
image
தொடர்ந்து விளையாடிய நமீபியா, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. டேவிட் வைஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்களில் தோல்வியடைந்தது. தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான், குரூப்-2 பிரிவிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments