Advertisement

செஞ்சுரியனில் புத்தாண்டு கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் புது வருட பிறப்பையொட்டி செஞ்சுரியனில் தங்கியிருக்கும் ஹோட்டலில் வைத்து இந்திய அணி வீரர்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் அணி வீரர்களுடன் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் கலந்துகொண்டனர். கொண்டாட்டத்தின்போது குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் டி காக்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments