Advertisement

'கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் வலியுறுத்தினோம்' - தேர்வுக் குழு தலைவர்

'கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என்று பி.சி.சி.ஐ. தரப்பில் விராட் கோலியிடம் கோரிக்கை வைத்தோம்' எனத் தெரிவித்துள்ளார் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா.

'20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக முடிவு எடுத்த போது, இந்த முடிவை கைவிடுங்கள் என்று வலியுறுத்தியும் அதை அவர் ஏற்கவில்லை' என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார். ஆனால் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ தரப்பில் யாரும் தன்னை கேட்கவில்லை என்று விராட் கோலி கூறி சமீபத்தில் சர்ச்சையை கிளப்பினார்.

image

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா பேட்டி ஒன்றில் கூறுகையில், ''டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கவில்லை. தேர்வுக் குழுவினர், வாரிய நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், டி20 உலகக்கோப்பை போட்டி முடிந்த பிறகு அது பற்றி பேசிக்கொள்ளலாம் எனவும் கோலியிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

image

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும்படி கோலியிடம் யாரும் சொல்லவில்லை. இது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகியதும், வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு (ஒரு நாள் மற்றும் டி20) ஒரே கேப்டனே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ரோகித் சர்மாவை நியமித்தோம்'' என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க: செஞ்சுரியனில் புத்தாண்டு கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments