Advertisement

IND vs SA : மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 146 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. முதல் இன்னிங்ஸில் இந்தியா 327 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 197 ரன்களும் எடுத்திருந்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை 130 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. 

image

மூன்றாம் நாள் ஆட்டமான இன்றைய நாளில் இரு அணி பவுலர்களும் 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். இதில் இந்திய அணி பவுலர்கள் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர் ஷமி, அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 

இரண்டாம் ஆட்டம் முழுவதும் மழையினால் நடத்தப்படாத சூழலில் இந்த போட்டியில் நிச்சயம் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் மயங்க் அகர்வால், 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். நைட் வாட்ச்மேனாக ஷர்துல் தாக்கூர் களம் இறங்கினார். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments