Advertisement

நீரஜ் சோப்ரா - ரிஷப் பந்த் முதல்முறையாக சந்திப்பு : வைரலாகும் புகைப்படம்

நீரஜ் சோப்ரா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் முதல்முறையாக சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தவர், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. சமீபத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீரஜ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தை நேர்காணலுக்காக சந்தித்தார். இரண்டு விளையாட்டு வீரர்களும் முதல்முறையாக சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

image

"உங்களுடன் ஒரு நண்பர் இருக்கும்போது கேமராக்களை எதிர்கொள்ள எப்போதும் எளிதானது. ரிஷப் உடன் இதைச் செய்வது மிகவும் வேடிக்கையாக இருக்கும்" என்று நீரஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: வீரமே வாகை சூடும் முதல் பீஸ்ட் வரை: திரையரங்குகளை முற்றுகையிட வரிசை கட்டும் திரைப்படங்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments