Advertisement

வரம்புக்குள் இருந்தால் மட்டுமே.. - ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை தொடருமா ஸ்டார் நெட்வொர்க்?

மும்பை: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற ஸ்டார் நெட்வொர்க் மற்றும் சோனி ஆகிய இரு நிறுவனங்கள் மத்தியில்தான் அதிகளவில் போட்டி இருக்கும். கடந்த முறை இந்தப் போட்டியை சமாளித்து ஸ்டார் நெட்வொர்க் அந்த உரிமையைப் பெற்றது. கடந்த வருட ஐபிஎல் சீசன் இரண்டு கட்டங்களாக நடந்ததால், ஸ்டார் நெட்வொர்க்கின் வருமானம் பாதித்ததாக சொல்லப்பட்டது. இதனால் இந்த முறை ஸ்டார் நெட்வொர்க் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெறுமா என்பதில் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்டார் இந்தியாவின் தலைவர் கே.மாதவன் விடைகொடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "விளையாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற, ஸ்டார் நெட்வொர்க் தொடர்ந்து தனது முதலீட்டை செய்யும். அதிக முதலீடு செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். அனைத்து உரிமங்கள் புதுப்பித்தல்களிலும் நேர்மறையாக இருக்கப் போகிறோம். எங்கள் நிறுவனத்தின் 60%க்கும் அதிகமான பங்குகள் விளையாட்டில்தான் உள்ளது. எனவே, அதை தொடரவே விரும்புகிறோம். ஆனால் எங்கள் வரம்புக்குள் இருந்தால் மட்டுமே, ஒளிபரப்பு ஏலத்தை எடுப்போம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments