Advertisement

மத்திய பட்ஜெட் 2022: இதுவரை இல்லாத உச்சம் - விளையாட்டுத் துறைக்கு ரூ.3,062 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே இருந்தது.

2020 - 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2827 கோடியை விளையாட்டுத்துறைக்காக ஒதுக்கீடு செய்தது. அந்த ஆண்டுகள் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உள்நாட்டு போட்டிகள் கரோனா தொற்றுநோயால் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் அறிவித்த பட்ஜெட்டை ரூ.1878 கோடியாகக் குறைத்தது. இதேபோல், 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.2596 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வர, திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.2757.02 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இந்தமுறை விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments