Advertisement

பிரசித் கிருஷ்ணா: இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சுக்கு கிடைத்த மற்றுமொரு வைரம்!

'நீண்ட காலமாக இதுபோன்ற ஒரு ஸ்பெல்லை நான் பார்க்கவில்லை' - இது இந்திய கேப்டன் ரோஹித் நேற்றைய பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங் குறித்து தெரிவித்தது. ரோஹித் கூறியது உண்மைதான். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரசித்தின் ஸ்பெல் அப்படித்தான் இருந்தது. லைன் அண்ட் லெந்தில் அத்தனை துல்லியமாக பந்துவீசி, தனியொருவனாக மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். இந்த ஒரு ஸ்பெல்லால் நேற்று ஒரே இரவில் ஸ்டார் ஆக உயர்ந்துள்ளார் கர்நாடக மண்ணின் மைந்தனான இந்த பிரசித் கிருஷ்ணா.

முதல் போட்டியுடன் ஒப்பிடும் வேளையில் நேற்றையப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராகவே விளையாடினார். இதை இப்படிச் சொல்வதை விட, மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் எனலாம். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி, 237 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். இது எட்டக்கூடிய டார்கெட்தான். மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் லைன்-அப்பும் அதற்கேற்றார்போலவே இருந்தது. இதனால் மிகப்பெரிய நம்பிக்கையில் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments