Advertisement

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி - 'ஒயிட் வாஷ்' செய்யுமா இந்தியா?

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் 'ஒயிட் வாஷ்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்தியாவும், ஆறுதல் வெற்றிக்கான முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

image

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஷிகர் தவன், இளம் வீரர் ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயம் காரணமாக இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடாத மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டு அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க: க்ளிக் ஆன பிரசித், ஆகாத பண்ட் - தொடரும் இந்தியாவின் பரிசோதனை முயற்சிகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments