Advertisement

ரஞ்சி டிராபியில் விளையாடுங்கள் - புஜாரா, ரஹானேவுக்கு கங்குலியின் அட்வைஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதற்கு ரஹானே, புஜாராவின் மோசமான ஃபார்ம் ஒரு காரணமாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தபோதிலும், பேட்டிங்கில் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தத்தில் ரஹானே (136 ரன்கள், சராசரி 22), புஜாரா (154) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். மோசமான ஃபார்ம் காரணமாக ரஹானே, புஜாரா இருவரையும் அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments