Advertisement

தினமும் 40 கி.மீ பயணம், வேலையிழப்பு... - தந்தையின் அர்ப்பணிப்பால் U -19 உலகக் கோப்பையில் சாதித்த ஷேக் ரஷீத்!

குண்டூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மூலம் புதிய ஸ்டாராக உருவெடுத்துள்ள ஷேக் ரஷீத்தை ஆந்திர இளைஞர்கள் வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காரணமாக இருந்த ரஷீத்தின் பின்புலம் பற்றிய தொகுப்பு இது.

ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்தவர் ஷேக் பாலிஷாவலி. இந்தியாவில் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும், பாலிஷாவலிக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், அவர் குண்டூர் நகரில் இருந்து 40 கி.மீ பயணம் செய்து மங்களகிரிக்கு அருகிலுள்ள கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் செல்வது வழக்கம். அது அவருக்காக அல்ல. அவரின் மகன் ஷேக் ரஷீத்தின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அந்த இரண்டு மணிநேர பயணத்தை தினமும் செய்தார் பாலிஷாவலி. கிரிக்கெட் அகாடமிக்கு வரும் சக பெற்றோர்கள் பாலிஷாவலியை பார்க்கும் போதெல்லாம் கேட்பது 'உங்க பையன் பொறக்கும்போது எந்த பெரிய மனுஷனும் இறந்துவிட்டார்களா?' என்பதுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments