Advertisement

’போருக்கு மத்தியில் நாம்...’ - உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு விளையாட்டு உலகின் எதிர்வினைகள்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, விளையாட்டு உலகின் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் போருக்கு தங்களின் எதிர்ப்பைக் கடுமையாக பதிவு செய்து வருகின்றனர்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உலகெங்கிலும் எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளது. எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து உக்ரைனை கையப்படுத்துவதில் ரஷ்ய படைகள் முன்னேறிச் செல்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், விரைவில் கீவ் நகரம் முழுவதும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பு விளையாட்டு உலகிலும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments