Advertisement

மூழ்கிய கப்பலை கரைசேர்த்த பயிற்சியாளர் - லாங்கர் ராஜினாமா கவனம் பெறுவது ஏன்?

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்துள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள் உடனான நேற்றைய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார்.

பதவி காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், லாங்கர் ராஜினாமா செய்திருப்பது குறித்து அறிக்கை வெளியிட்ட அவரின் மேலாளர், "முகம் தெரியாத சிலரின் விமர்சனங்களைத் தாண்டி, டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வெற்றியின் உச்சிக்கு கொண்டுச் சென்ற பிறகு தனது பயிற்சியாளர் பணியை முடித்துக்கொண்டுள்ளார். 2018-ல் ஆஸ்திரேலிய அணி எந்த நிலையில் இருந்தபோது லாங்கர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தார் என்பதை அவரை விமர்சித்தவர்கள் நினைவுப்படுத்தி பாருங்கள்" என்று கோபமாக தெரிவித்துள்ளார். இந்த ஆவேச வார்த்தைக்கு பின்னாலும், லாங்கரின் ராஜினாமாவுக்கும் பின்னணியில் நீண்ட சர்ச்சைகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments