Advertisement

மோசடி செய்தாரா சிஎஸ்கே வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்? - ஐஏஎஸ் அதிகாரி கடிதத்தால் சர்ச்சை 

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அண்மையில் இந்திய அணி ஐந்தாம் முறையாக U19 உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கியப் பங்கு வகித்தவர் மும்பையைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். உலகக் கோப்பை தொடரில் திறமையான வேகப் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் பேட்டிங்கில் அதிக தூர சிக்ஸர்களை விளாசி எதிரணிகளை கலங்கடித்தார். இவரின் ஆட்டத்தை அஸ்வின் வெகுவாக பாராட்டிய நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் ராஜ்வர்தன் வயது மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று மகாராஷ்டிர விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments