Advertisement

கரோனா, தந்தை இறப்பு, கேன்சர்... U-19 WC வென்ற இந்திய வீரர்களின் சொல்லப்படாத வேதனைகள்!

புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஐந்தாவது முறையாக பட்டம் சூடியிருக்கிறது இந்திய அணி. 2000-ம் ஆண்டு முகமது கைஃப், 2008-ல் விராட் கோலி, 2012-ல் உன்முகுந்த் சந்த், 2018-ல் பிரிதிவி ஷா ஆகிய நான்கு கேப்டன்கள் தலைமையில் இந்திய கிரிக்கெட் ஐ.சி.சி யு-19 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த நான்கு அணிகளும் சந்திக்காத வேதனையை, வலிகளைக் கடந்து இந்தமுறை யஷ் துல் தலைமையிலான இந்திய யு19 அணி வெற்றிவாகை சூடியுள்ளது.

வீரர்கள் சந்தித்த முக்கிய சவால் கரோனா தொற்று. தென்னாப்பிரிக்காவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை நம்பிக்கையுடன் தொடங்கிய இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் கரோனா வில்லனாக உருவெடுத்தது. அயர்லாந்திற்கு எதிரான போட்டிக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்திய அணி கேப்டன் யஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரஷீத், ஆராத்யா யாதவ், மானவ் பராக் மற்றும் சித்தார்த் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் வசு வாட்ஸ்க்கு அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் 10 வீரர்கள் மட்டுமே அயர்லாந்திற்கு எதிராக விளையாட உடல் தகுதியுடன் இருந்தார்கள். பதினொன்றாவது வீரராக வேறுவழியில்லாமல் காயத்தில் இருந்த கவுதம் அணிக்கு அழைக்கப்பட்டார். ஸ்டேடியத்திற்கு புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments