Advertisement

'பேட்டிங்கில் யுவராஜ்... பந்துவீச்சில் கபில்...' - தந்தையால் செதுக்கப்பட்ட ஆல் ரவுண்டர் ராஜ் பாவா கதை | U-19 World Cup

தர்மசாலா: ஆன்டிகுவாவில் நடந்த ஐ.சி.சி யு19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சரித்திரம் படைக்க உதவியவர் ராஜ் அங்கத் பாவா. இந்தத் தொடர் முழுவதுமே ராஜ் பாவா, இந்திய அணிக்கு சிறப்பான ஆல் ரவுண்டர் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினார். தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள், அயர்லாந்துக்கு எதிராக 42 ரன்கள், உகாண்டாவுக்கு எதிராக 14 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள்எடுத்தது, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இறுதிப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் என தொடர் முழுவதுமே ஸ்டார் ஆல் ரவுண்டராக செயல்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சு முதல் பேட்டிங் வரை ராஜ் பாவாவின் சிறந்த செயல்திறனுக்கு பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது. ஹிமாச்சல் மண்ணின் மைந்தனான ராஜ் இன்று அடைந்துள்ள புகழை அவரது தந்தை சுக்விந்தர் பாவா 22 ஆண்டுகளுக்கு முன்பே இதேபோன்றொரு யு19 உலகக் கோப்பை தொடரில் மூலமாக பெற்றவர். 2000-ல் நடந்த யு19 உலகக் கோப்பை தொடரில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதில் முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். அவருக்கு பயிற்சியாளராக இருந்ததற்காக அன்று சுக்விந்தர் பாவா கொண்டாடப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments