Advertisement

“தென்னாப்பிரிக்க அணியுடனான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்” - ஷெஃபாலி வர்மா

நியூசிலாந்து நாட்டில் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகவிடும்.

இந்திய அணி இந்த தொடரின் முதல் சுற்றில் இதுவரையில் விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் டாப் 4 அணிகளில் ஒன்றாக இந்தியா இணைந்து விடும். 

image

இந்நிலையில் அந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் வீராங்கனை ஷெஃபாலி வர்மா. 

“எனக்கு அணியில் ஆடும் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காக நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன். அந்த சூழலை எப்படி கையாள்வது என்பது எனக்கு தெரியும். ஆஸ்திரேலிய அணியுடன் எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 

கடந்த போட்டி எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதனால் நாளைய போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாட மிகவும் வேடிக்கையாக இருக்கும். இது மிகவும் முக்கியமான போட்டி. அனைத்து வீராங்கனைகளும் தங்களது 100% கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள். இந்த போட்டியில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைப்பது தான் எங்களது நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments