Advertisement

“வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதே!” - காரணம் சொன்ன விராட் கோலி

15-வது ஐபிஎல் சீசன் இனிதே தொடங்குகிறது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பதை போல உணர்வதாக தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். 

கடந்த 2013 சீசன் முதல் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் கோலி. நடப்பு சீசனில் ரன் குவிக்கும் முனைப்போடு பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அவர். இந்நிலையில் அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார். 

“வார இறுதி நாளன்று நடைபெற உள்ள போட்டியை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். ஐபிஎல் மீதான ஆர்வமும் மோகமும் தீயாக பரவி இருக்கிறது. இதனை ரொம்பவே எதிர்பார்த்து உள்ளேன். தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போல உள்ளது” என தெரிவித்துள்ளார் கோலி. 

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

பெங்களூர் அணி நாளை நடைபெறவுள்ள போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது. புதிய கேப்டனான டூப்ளசிஸ் அந்த அணியை வழி நடத்த உள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments