Advertisement

பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? - பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் விளக்கம்

மும்பை: ஐபிஎல் டி 20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததே தோல்விக்குக் காரணம் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன் தினம் மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், ஒடின் ஸ்மித்ஆகியோரது அதிரடியால் 6 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments