Advertisement

ஐபிஎல் போட்டியில் கவனம் ஈர்த்த லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு களமிறங்கிய இளம் வீரரான ஆயுஷ் பதோனி, தனது அதிரடியால் அறிமுக ஆட்டத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியடைந்தது. 159 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி இறுதிக்கட்ட ஓவர்களில் ராகுல் டிவாட்டியா 24 பந்துகளில் 40 ரன்களும், அபினவ் மனோகர் 7 பந்துகளில் 15 ரன்களும் விளாசியதன் மூலம் 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments