Advertisement

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றி

பே ஓவல்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பெற்றுள்ளனர் இந்திய வீராங்கனைகள்.

நியூசிலாந்தில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இம்முறை மிதாலி ராஜ் தலைமையில் களம்கண்டுள்ள இந்திய அணி லீக் ஆட்டத்தில் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டதில்லை. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வெற்றியை சுவைத்துள்ளது என்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக ஆரம்பம் முதலே இருந்தது. டாஸ் வென்ற மிதாலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுத்தார் பாகிஸ்தான் வீராங்கனை டயானா பெய்க். இந்திய அணியின் அதிரடி மங்கை ஷெபாலியை, டயானா டக் அவுட் செய்ய இரண்டாவது ஓவரிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments